கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Wednesday 1 June 2016

கருப்பையும்... கருப்பையில் ஏற்படும் பாதிப்புகளும்....!

கருப்பையும்... கருப்பையில் ஏற்படும் பாதிப்புகளும்....!

டாக்டர். கே.எஸ்.ஜெயராணி -
Kinds of problems affecting Uterus - Food Habits and Nutrition Guide in Tamilமனித உறுப்புகளில் மகத்துவம் நிறைந்தது, கருப்பை. பெண் இனத்திடம் மட்டுமே இருக்கும் ஆக்க சக்தியின் அற்புதம் இது!
கிட்டத்தட்ட முக்கோண வடிவத்தில் மேல் பகுதி விரிந்தும், கீழ் பகுதி குறுகியும் காணப்படுகிறது. 8 முதல் 9 செ.மீ. நீளம் கொண்டது. கருப்பையின் வாய்ப் பகுதி பெண் உறுப்பில் இருந்து தொடங்குகிறது. கரு தங்குவதற்கு முன்னால், கருப்பையை தொட்டுப்பார்த்தால் நமது மூக்கைத் தொட்டால் எப்படி இருக்குமோ அதுபோல் சற்று கடினமாகத் தெரியும். கரு தங்கி வளரத் தொடங்கிய பின்பு தொட்டுப்பார்த்தால் நமது உதடுகளைத் தொடுவது போன்று மென்மையாக உணர முடியும்.

கருப்பை தசைகளால் ஆனது. அதன் உள்ளே ரத்தக் குழாய்களால் ஆன மெத்தை போல் எண்டோமெட்ரியம் உள்ளது. சினைப் பையில் இருந்து சினை முட்டை முதிர்ந்து- வெடித்து- வெளியேறி கருக்குழாயில் உயிரணுவை சந்தித்து, அங்கேயே கருவாகி, அது சில ரசாயனங்களை வெளிப்படுத்தும். அந்த ரசாயன மாற்றங்களால் கரு நகர்ந்து, 5-வது நாள் கருப்பைக்குள் சென்று, அங்கேயே ஒட்டி வளரத் தொடங்கிவிடும். கருவை வளர வைப்பது எண்டோமெட்ரியத்தின் வேலை. முதலில் சிறிதாக இருக்கும் எண்டோமெட்ரியம், பின்பு வளர்ந்து 9 மி.மீ. அளவை எட்டும்.
வயதுக்கு வந்த எல்லா பெண்களுக்கும் மாத விலக்குக்கு முந்தைய நாள்வரை எண்டோமெட்ரியம் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். உடலுறவு நிகழ்ந்து உயிரணு சென்று- சினை முட்டையும் வெளியேறி வந்து- இரண்டும் சந்தித்து கருவாக்கத்திற்கான செயல்கள் நிறைவேறா விட்டால் இந்த எண்டோமெட்ரியத்திற்கு கருப்பைக்குள் வேலையில்லை. அதனால் அது வெடித்து வெளியேறும். இதுதான் மாத விலக்கு உதிரம். (கருவாக்கம் நிகழ்ந்தால் எண்டோமெட்ரியம் கருவை வளர்க்கத் தொடங்கிவிடும்) மாதவிலக்கு உதிரம் 200-300 மி.லி. அளவில் 2-3 நாட்களாக வெளியேறிக் கொண்டிருக்கும்.
'மாதவிலக்கு காலத்தில் தம்பதிகள் உறவு வைத்துக்கொண்டால் ஜன்னி வந்துவிடும்' என்ற கருத்து தவறானது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் செயல்பாடுகளால் செக்ஸ் உணர்வு மிகுதியாகும். அப்போது செக்ஸ் வைத்துக் கொள்வது பெண்களுக்கு மகிழ்ச்சியை தருவதோடு, அந்த நேரத்தில் சுரக்கும் என்டார்பின் ஹார்மோன் வலி நிவாரணியாக மாறி, மாத விலக்கு கால வலியையும் குறைக்கும். அதனால் கணவன், மனைவி இருவரும் விரும்பினால், சுகாதாரமான முறையில் உடலுறவை மேற்கொள்ளலாம். (மாதவிலக்கு கால உறவால் கர்ப்பம் ஏற்படாது)
மாதவிலக்கு உதிரப்போக்கு அதிக நாட்கள் தொடர்வதும், ஒரே நாளில் வந்து நின்று விடுவதும் குறைபாடுதான். சிகிச்சை மூலம் அதற்கு உடனடியாக தீர்வு கண்டிட வேண்டும்.
கருப்பை வளரும் தன்மை கொண்ட திசு. உள்ளே தங்கும் கரு வளர வளர கருப்பையும் வளரும். இரண்டு, மூன்று குழந்தைகளை தாங்கும் சக்தியும் அதற்கு இருக்கிறது. கரு, திசுவாகி- குழந்தையாக வளர்ந்த பின்பு கருப்பைக்குள் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், அதனை சுருங்கவைத்து குழந்தையை வெளியே தள்ளுகின்றன. இதுவே பிரசவத்திற்கான தூண்டுதலாகும்.
கருப்பையில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?
* எண்டோமெட்ரியம் பாதித்து கருப்பையில் காச நோய் தோன்றலாம்.
* தாய் வயிற்றுக்குள் இருக்கும்போதே பெண் சிசுவுக்கு கருப்பை உருவாகி விடும். முதலில் அது மாட்டுக்கொம்பு போல் இரண்டு டியூப் ஆக உருவாகி, வளர்ந்து இணையும். அதன் உள்ளே பள்ளமான பகுதியும் தோன்றும். ஒரு பக்கம் மட்டும் மாட்டுக்கொம்புபோல் வளர்ந்திருந்தாலோ, போதுமான வளர்ச்சியின்றி இருந்தாலோ, அளவில் சுருங்கி பிறவியிலேயே குறைபாட்டுடன் இருந்தாலோ அது பாதிப்பிற்குரிய அம்சமாகும். இத்தகைய பாதிப்பு கொண்ட பெண்களுக்கு திருமணமாகி, குறைவற்ற முறையில் உடலுறவு நிகழ்ந்தாலும் தாய்மையடைய முடியாத சூழல் ஏற்படும்.
* கருப்பையின் வாய் எப்போதும் மூடியிருக்க வேண்டும். உயிரணு அதன் உள்ளே செல்லவும்- திரவம் வெளியே வரவும் மட்டும் வழியிருக்க வேண்டும். அதற்கு மாறாக கருப்பை வாய் திறந்திருந்தால் கரு உள்ளே தங்காமல், கலைந்து வெளியேறி விடும்.
* கருப்பையில் பைப்ராய்ட் போன்ற கட்டிகள் உருவானாலும் கருப்பை பாதிக்கப்பட்டு, தாய்மை தள்ளிப்போகும்.
* கருப்பை புற்றுநோய் தோன்றலாம்.
* கருப்பை வாயில் 'பாலிப்' எனப்படும் கட்டிகள் தோன்றலாம்.
பெண்களுக்கு தாய்மை தள்ளிப்போகும்போது கருப்பையில் பாதிப்பு ஏதாவது இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அதற்கான நவீன சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
பின்குறிப்பு: மாதவிலக்கு காலத்தில் பெண்களை தனிமைப்படுத்தி எந்த பொருளையும் தொடக்கூடாது என்று ஒதுக்கிவைக்கும் நிலை இப்போதும் சில இடங்களில் இருக்கிறது. மனிதன் முதலில் காட்டுக்குள்தான் வாழ்ந்தான். அப்போது மனிதனைச் சுற்றி காட்டுமிருகங்கள் நிறைய இருந்தன. சிங்கம், புலி போன்றவைகள் மனிதனின் ரத்தவாடையை 2 கி.மீ. தூரத்தில் இருந்துகூட கண்டுபிடித்து, அங்கு மனிதன் இருப்பதை உணர்ந்து, தேடி வந்து தாக்கி விடும். அதனால் மாதவிலக்கு நாட்களில் பெண்களை தனிமைப்படுத்தி பாதுகாப்பான குகை மற்றும் உயரமான மரங்களில் வைத்தார்கள். இப்போது பாதுகாப்பான உலகில் பெண்கள் வாழ்வதால், மாதவிலக்கு காலத்தில் அவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய கர்ப்ப காலத்தில் !
கர்ப்ப காலத்தின் போது உங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் சாதாரணமானதா, இல்லையா என்று கூறுவது கடினம். ஆனாலும் கீழ்கண்டவற்றில் ஏதாவது ஒரு பிரச்னை இருந்தாலும் உடனே உங்கள் நர்சையோ அல்லது டாக்டரையோ தொடர்புகொள்ளவும்.

உங்கள் உடல்நலன் நன்றாக இல்லை என்று நீங்கள் உணர்வது
உங்களுக்குத் தோன்றியுள்ள அறிகுறி பற்றி தெளிவாக தெரியாத போதும் உடல்நலக் குறைவு இருப்பதாக தோன்றும் போதும் உங்கள் டாக்டரையோ அல்லது நர்சையோ தொடர்புகொள்ளவும். உங்களுக்கு பிரச்னை ஏதாவது இருந்தால் சிகிச்சை தருவார்கள். இல்லையெனில் வீடு திரும்பி விடலாம்.

குமட்டல் மற்றும் வாந்தியுடனோ அல்லது அவை இல்லாமலோ அடிவயிற்றில் வலி
வலி அதிகமாக இருந்தால் அது அஜீரணத்தையோ, வயிற்றில் வைரஸ் இருப்பதையோ அல்லது நீங்கள் உண்ட உணவில் ஏதோ விஷத்தன்மை இருப்பதையோ காட்டுகிறது. சில சமயங்களில் ப்ரீ&எக்லம்சியா என்ற (அதீத பதற்ற உணர்வு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரோட்டீன் காணப்படுவது) நோயின் காரணமாகவும் இந்த வலி ஏற்படக் கூடும். உங்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்கு பாதிப்பு வராது இருக்க ப்ரீ&எக்லம்சியாவிற்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

காய்ச்சல்
உங்கள் உடலின் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸ§க்கு அதிகமாக இருந்தால்  டாக்டரை தொடர்பு கொள்ளுங்கள். 39 டிகிரி செல்சியஸ§க்கு அதிகமாக இருந்தால் உடனே டாக்டரை பாருங்கள். உங்களுக்கு ஏதாவது நோய் தொற்றியிருக்கக் கூடும்.

கண்பார்வையில் பிரச்னைகள்
இரட்டைப் பார்வை, தெளிவற்ற பார்வை, பார்வை மங்குதல் ஆகியவை ப்ரீ&எக்லம்சியாவிற்கான அறிகுறிகளாக இருக்கக்கூடும்.

முகம், கண் மற்றும் கைகள் வீங்குதல்
பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பத்தின் போது வீக்கம் ஏற்படும். நோய் அறிகுறிகள் திடீரென ஏற்பட்டாலோ தீவிரமாக இருந்தாலோ, இதனுடன் தலைவலி மற்றும் கண்பார்வையில் பிரச்னைகள் ஏற்பட்டாலோ அது ப்ரீ&எக்லம்சியாவிற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

கடுமையான தலைவலி
தலைவலி இரண்டு, மூன்று மணி நேரத்திற்கு மேல் நீடிப்பதுடன் கண்பார்வையிலும் பிரச்னைகள் மற்றும் கைகள், கண், முகம் ஆகியவற்றில் வீக்கம் ஏற்படும் எனில் உங்களுக்கு ப்ரீ&எக்லம்சியா இருக்கக் கூடும்.

பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு
கர்ப்பத்தின் போது ஏற்படும் இரத்தப்போக்கானது ஏதோ ஒரு தீவிரமான பிரச்னை இருப்பதை காட்டுகிறது:

• கருவானது கருப்பைக்கு வெளியே வளர்வதை இரத்தப்போக்கும் மற்றும் வயிற்றுவலி ஏற்படுவதும் காட்டுகிறது. இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

• ஏராளமான இரத்தப்போக்கு மற்றும் நீண்ட நேரம் நீடிக்கும் வயிற்று வலியானது கரு கலைந்து விட்டதை காட்டுவதாக இருக்கலாம்.

• கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில் (28 வாரங்களுக்குப் பிறகு) ஏற்படும் இரத்தப்போக்கு, கருப்பையை விட்டு பிளசன்ட்டா (கருவிலுள்ள குழந்தைக்கு உணவும் ஆக்சிசனும் வழங்கும் உறுப்பு) வெளியே வந்துவிட்டதை காட்டுவதாக இருக்கலாம். அல்லது குறைப்பிரசவத்தின் (37 வாரங்களுக்கு முன்பே நிகழும் பிரசவம்) போது ஏற்படும் வலியாகவும் இருக்கலாம்.

பிறப்புறுப்பிலிருந்து திரவம் கசிவது
• கருப்பையில் உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்கும் திரவப் பையானது 37 வாரங்களுக்கு முன்பே உடைந்துவிட்டால் பிறப்புறுப்பில் திரவம் கசியும். இவ்வாறு ஏற்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நோய் தொற்று ஏதும் ஏற்படாதிருக்க சிகிச்சை பெறவேண்டும் அல்லது குறைப்பிரசவத்திற்கு தயாராக வேண்டும்.

அளவிற்கு அதிகமான தாகம்
இது உடலில் தண்ணீரின் அளவு குறைந்திருப்பதற்கான அறிகுறி. அல்லது கர்ப்பத்தின் போது ஏற்படும் நீரழிவு நோயின் அறிகுறியாகவும் இது இருக்கலாம். இது உங்களுக்கும் பிறக்க இருக்கும் குழந்தைக்கும் பாதிப்புகளை  அதிகரிக்கும்.

சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி அல்லது எரிச்சல்
உங்களுக்கு காய்ச்சலோ, உடல் நடுக்கமோ அல்லது முதுகு வலியோ இருந்தால்  நீர்க்கடுப்பு இருக்கக்கூடும். இது கிட்னி, மூத்திரப்பை ஆகியவற்றை பாதிக்கிறது. இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

மோசமான வாந்தி
கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் நாள் ஒன்றிற்கு இரண்டு அல்லது மூன்று முறைகளுக்கு மேல் வாந்தி எடுத்தால் அது உங்கள் உடலில் உள்ள தண்ணீரீன் அளவை குறைத்து விடும். ஆகவே நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். கர்ப்ப காலத்தின் கடைசியில் காய்ச்சல் மற்றும் விலா எலும்புகளுக்கு கீழே ஏற்படும் வலியுடன் வாந்தி வந்தால் அது ப்ரீ&எக்லம்சியாவிற்கான அறிகுறியாக இருக்கக் கூடும்.

மயக்கம் அல்லது தலைச்சுற்றல்
உங்களுக்கு இரத்த அழுத்தக் குறைவு இருக்கக்கூடும். மயக்கத்திற்கு வேறு ஏதாவது காரணமா என்பதையும் அறிய உடனே டாக்டரை பார்க்கவும்.

அடிவயிற்றில் கடுமையான வலி
வயிற்றில் ஒரு புறமோ அல்லது இருபுறங்களிலுமோ வலி இருந்தால் அது குறைப்பிரசவமாக இருக்கலாம், அல்லது கருப்பை உடைந்து பிளசன்ட்டா வெளியே வந்துவிட்டதாலும் அத்தகைய வலி ஏற்படலாம்.

குழந்தையின் இயக்கம் இல்லாதிருப்பது அல்லது குறைவாக இருப்பது
21 வாரங்களுக்குப் பிறகு கர்ப்பத்திலிருக்கும் உங்கள் குழந்தை இயங்குவது குறைந்து விட்டால் அல்லது நின்றுவிட்டால் (இது 24 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தால்) உங்கள் குழந்தை வலியுடனோ அல்லது ஏதோ கஷ்டத்திலோ இருக்கிறது என்று அர்த்தம்.

கர்ப்ப காலத்தின் இறுதியில் உடல் முழுவதும் நமைச்சல் ஏற்படுவது
நமைச்சல் தீவிரமாக இருந்தால் அதிலும் இரவில் கடுமையாக இருந்தால் (குறிப்பாக உள்ளங்கைகளிலும். பாதங்களிலும் அதிக நமைச்சல் இருந்தால்) அது உங்கள் கல்லீரலில் பிரச்னை இருப்பதை காட்டுகிறது.

கீழே விழுந்து விட்டால் அல்லது வயிற்றில் ஏதாவது அடி விழுந்தால்
உங்கள் டாக்டரையோ அல்லது நர்சையோ தொடர்பு கொண்டு நடந்தை விளக்குங்கள். கருப்பையில் உங்கள் குழந்தை மிகவும் பத்திரமாக இருக்கும், எனவே கவலைப்பட வேண்டாம். ஆனால் ஏதாவது தசை இறுக்கம் இருந்தாலோ பிறப்புறுப்பிலிருந்து ஏதாவது திரவம் அல்லது ரத்தக் கசிவு இருந்தாலோ உடனே டாக்டரை தொடர்பு கொள்ளவும். அல்லது அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேரவும்.

No comments:

Post a Comment