கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Saturday 9 May 2015

தாய்ப்பாலின் நன்மைகள்


தாய்ப்பாலின் நன்மைகள்
தாய்ப்பால் பிறந்த குழந்தைக்கு ஒரு முழுமையான ஊட்ட உணவு.

நோயுற்ற குழந்தைக்கு தாய்ப்பாலும், தாயின் அரவணைப்பும் இதமளிக்கின்றன. குழந்தையின் மன வளர்ச்சிக்கு அது உதவுகிறது.

தாய்ப்பாலூட்டுவது தாய்க்கும் பல நண்மைகளை அளிக்கும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பாலூட்ட ஆரம்பிப்பதால், கருப்பை விரைவில் சுருங்கி உதிரப் போக்கு குறையும். அதனால், தாயின் இரத்தம் வீணாகாமல், சோகை ஏற்படாமல் தடுக்கப்படும். தாய்ப்பாலூட்டும் தாய் தேவையற்ற தன் உடல் எடையைக் குறைத்து மீண்டும் பழைய வடிவைப் பெற முடியும். முதல் 4-6 மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே அளிக்கும் தாய்மார்கள் உடனே கர்ப்பம் ஆவதில்லை. இத்தகைய தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதும் குறைவு.


புட்டிப்பால்

அலுவலகப் பணியை முன்னிட்டு வெளியில் போகிற தாயும், தன் குழந்தைக்குப் போதிய பாலை சுரக்க முடியாத தாயும் குழந்தைகளுக்காக சிபாரிசு செய்யப்படும் பவுடரை, வெந்நீரில் கரைத்து புட்டியில் அடைத்துக் கொடுக்கலாம். தயாரிப்பாளர் குறித்திருக்கும் அளவில் கரைத்து பாலைத் தயாராக்க வேண்டும்.

தாய்ப்பால் போதவில்லை. (குழந்தை பிறந்த நான்கைந்து மாதங்களில்) என்கிற நிலை வரும்போது பசும்பால் அல்லது எருமைப்பால் கொடுக்கலாம். பாலுடன் ஒரு மடங்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைத்து ஆறவிடவேண்டும். மேலே படர்ந்து இருக்கும் பாலாடையை நீக்கிவிட்டு, புட்டியில் பாலை ஊற்றிக் கொடுக்கலாம்.

பாட்டிலில் பால் புகட்டும்போது கவனிக்க வேண்டியவை -

பால் புகட்டும் புட்டி, மூடி, ரப்பர் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறையாவது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சுத்தம் செய்ய வேண்டும். ரப்பரில் போடப்படும் துளை (ஓட்டை) சிறியதாக இருந்தால் குழந்தை பால் உறிஞ்சிக் குடிக்க சிரமப்பட்டு விரைவிலேயே களைத்துவிடும். அதே சமயம் ஓட்டை பெரிதாக இருப்பின் குழந்தைக்கு புரையேற வாய்ப்பு உண்டு. எனவே, ரப்பரில் இடப்படும் துளை சரியான அளவில் இருப்பது அவசியம்.

சில குழந்தைகள் கால வரையறைக்கு முன்னதாகப் (Premature) பிறந்துவிட்டிருக்கும். அத்தகைய குழந்தைகள் பலவீனமாக இருப்பதால் தாயின் மார்பகத்தில் இருந்து பாலை உறிஞ்ச இயலாது. சில நேரங்களில் தாயின் நோய்க் காரணங்கள் தாய்ப்பாலை பரிந்துரைக் வொட்டாமல் செய்துவிடும். அந்நிலையில் புட்டிப் பால்தான் கைகொடுக்கும்.

தாய்ப்பாலுக்கு நிகரானது பசுவின் பால். எருமை அல்லது ஜெர்ஸி பசுவின் பாலில் வெண்ணெய்ச் சத்து அதிகம் இருக்கும். அந்தப் பால் குழந்தையின் வயிற்றை கனக்கச் செய்துவிடும்.

முன்கூட்டியே பிறந்த குழந்தைகளுக்கும், பலவீனமான குழந்தைகளுக்கும் ஏடு நீக்கிய பாலைத்தான் தரவேண்டும்.

குழந்தைக்குப் பால் கொடுப்பது பற்றிய திட்டம் எல்லாக் குழந்தைக்கும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அது குழந்தையின் அளவு, எடை, விழிப்பு, ஆர்வம் இவற்றைப் பொறுத்தது. சாதாரணமாக நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை (விடியற்காலை இரண்டு மணி முதல் இரவு பத்து மணி வரை) பால் கொடுக்கலாம்.

பால் கொடுக்கிற புட்டி, ரப்பர், மூடி ஆகியவற்றை கொதித்த நீரில் கழுவி, நன்றாக உலரவைக்க வேண்டும்.

குழந்தைக்கு நான்கு, ஐந்து மாதங்கள் முடிந்தவுடன் பாலில் உள்ள சத்துக்கள் போதுமானதாக இருக்காது. அப்போது குழந்தைகளுக்கென்றே தயாரிக்கப்படுகிற ஃபாரெக்ஸ், ஸெரிலாக், நெஸ்டம் போன்றதை தேர்ந்தெடுத்துக் கொடுக்கலாம்.


No comments:

Post a Comment